Justice For World Cup Final- 2019
13 JULY 2019
பகவானே இது என்ன நீதி?
இரண்டை ஆறாக்கி முடிவை டையாக்கி
டையை இருமுறை டையாக்கி
நீ ஆங்கிலக்காரனுக்கே என
ஊரெல்லாம் பரை சாற்றி
ஊர்பழி ஏற்பானேன்?
மானிட அறிவிற்கு அப்பாற்பட்ட
உன் அறிவே இதற்கு காரணமானதால்
எங்களுக்கு சொல்லிவிடு அக்காரணத்தை
நாங்களும் புரிந்துகொள்ளும் வகையில்
ஏன் நாலு ரன்கள் தீர்ப்பு?
இது உனக்கே புரியாததா?
இல்லை ஐஸீஸீ உன் சொல்லையும்
கேட்காத அடங்காபிடாரியா?
இரண்டும் வென்றது என்ற தீர்ப்பு
எவ்வளுவு உகன்றது இந்த
ஈடில்லா உலக கோப்பை போட்டி
இருவர்க்கும் வெற்றி, எல்லோர்க்கும் வெற்றி
என்ற உணர்வை உலகமெல்லாம் பரப்ப
ஐஸீஸீ க்கு அறிவைக்கொடு என்று வேண்டி
இந்த என் முதல் கவிதையை முடிக்கிறேன்